புதன், 2 மே, 2012

கோழிக்கூண்டு-02 தொடர்ச்சி


        அன்பு நண்பர்களே,வணக்கம். 
         கொளப்பலூர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.




























































கோழி கூண்டு அமைப்பு-




அன்பு நண்பர்களே,வணக்கம். 
        கொளப்பலூர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.இங்கு கோழிகளுக்கு கூண்டு (வீடு) அமைப்பது பற்றி காண்போம்.
(1)

   
(2) வது







(3)வது



(4)வது







(5)வது






(6)வது







(7)






(8)வது







மனச்சோர்வு இல்லாத வாழ்வுக்கு...

                 






மனச்சோர்வு இல்லாத வாழ்வுக்கு...


இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் ஒவ்வொரு வினாடித் துளிகளும் நமக்கென்றே பரிசளிக்கப்பட்ட மிக அழகான தருணங்கள். ஒவ்வொரு தருணத்திலும் பல்வேறு அனுபவங்கள், அதற்குள் பொதிக்கப்பட்ட சின்ன சின்னச் சந்தோஷங்கள் என வியாபித்திருக்கின்றன. அவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரமும் நம் கையில் இருக்கிறது.

ஆனால், நாமோ நம்முடைய அன்றாடத் தேவைகளுக்காக ஓட ஆரம்பித்து, நமது எதிர்காலம், நமது வருங்கால சந்ததியினரின் தேவைகள் என ஓடிக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது. சிலர் குறித்த இலக்கை அடைகின்றார்கள். சிலர் அடைவதில்லை. பலருக்கு அடைந்தும் திருப்தியில்லை. உண்மையில் வெற்றியோ மன அமைதியோ, எதனையும் அடையக் கூடிய சக்தி நம்முள்ளேதான் உள்ளது.

நம் உண்மையான வழிகாட்டியான ஆழ்மனதை எளிய சுயமனோவசிய பயிற்சிக்குப் பழக்கி நாம் விரும்பும் நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வரலாம். தியானத்தின் போது இருக்கும் மனநிலை தான் ஆழ்மன சுயமனோவசியப் பயிற்சியின் மனநிலையும்.

பயிற்சிக்கான எளிய வழிகள்:
* முதலில் ஒரு அமைதியான இடத்தில் சற்று வசதியாக அமர்ந்துகொள்ளவும்.

* பிறகு கண்களை மூடி, மூச்சை நன்றாக உள் இழுத்து சில வினாடிகள் வைத்திருந்து, பின் வெளியே விடவும், இதே போன்று மூன்று முறை செய்யவும்.

* பிறகு, தலையிலிருந்து பாதம் வரை மெதுவாக கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும். முதலில் ஒவ்வொரு தசையும் ஓய்வாக உணரும்படியாக, ‘ரிலாக்ஸ்’ என்ற ரம்மியமான கட்டளையுடன், உச்சந்தலையில் ஆரம்பித்து முன் மண்டை, முகம், கழுத்து என அடி வரை அவசரமில்லாமல் கவனத்தை கொண்டு செல்ல வேண்டும். நமது உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ரிலாக்ஸ் ஆவதை கண்களுக்குள் காட்சியாகவும் உருவகம் செய்யலாம்.

* பயிற்சியின் போது வெளியிலிருந்து எண்ண அலைகள் தாக்காமல் இருக்க, நம்மைச் சுற்றி ஒரு வெள்ளை ஒளி சூழ்ந்து பாதுகாப்பதாக கற்பனை செய்து கொள்ளவும்.

* உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ஓய்வாக உணர்ந்து, ஒரு பாதுகாப்பு கவசத்தையும் உருவாக்கிய பிறகு, பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே மேலிருந்து கீழ் நோக்கி, மாடிப்படி வழியாகவோ அல்லது எலிவேட்டர் மூலமாகவோ இறங்குவதாக கற்பனை செய்யவும். ஒவ்வொரு எண்ணை எண்ணும்போதும் இன்னம் ஆழமாக, இன்னும் ஆழமாக என்று கூறிக்கொண்டே இறங்கவும். (கவனம் சிறிது பிசகுவது போல உணர்ந்தால், பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக்கொண்டே இறங்குவதை இரண்டு முறை செய்யலாம்.)

* இப்பொழுது நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மிக அழகான, மிக இனிமையான ஒரு இடத்திற்கு வந்துவிட்டதை உணருங்கள். அந்த இடம் உங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்த இடமாகவோ அல்லது உங்கள் விடுமுறை நாட்களில் செல்லும் இடமாகவோ அல்லது ஒரு கற்பனை இடமாகவோ கூட இருக்கலாம். மெதுவாக உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் பாருங்கள். மிருதுவாக அவற்றை தொட்டுப் பாருங்கள். சுற்றிக் கேட்கும் இனிமையான ஒலி, ஒருவிதமான நறுமணம் ஆகியவற்றை உணருங்கள். இந்த அனுபவம் மனக் கண் முன் தெளிவான உயிரோட்டமுள்ள காட்சியாகட்டும்.

* இப்பொழுது, உங்கள் குறிக்கோளைக் கற்பனை செய்யத் தொடங்கலாம். அந்தக் குறிக்கோள் கற்பனையில் காட்சியாகவோ, செயலாகவோ அல்லது வார்த்தை வடிவாகவோ இருக்கலாம். குறிக்கோள் கற்பனை பலமுறை செய்யவும்.

* பிறகு அந்த குறிக்கோள் முழுமை அடைவதைபல நிலைகளாக்கி, ஒவ்வொரு நிலைக்கும் சென்று, அந்த ஒவ்வொரு நிலை வெற்றி தரும் அனைத்து உணர்வுகளையும், அமைதியாக முழுமையாக அனுபவிக்கவும்.

* இதில் மிக முக்கியமானது, பயிற்சி பலன் கொடுக்க, நாம் உபயோகிக்கும் அனைத்து வார்த்தைகளும் நேர்மறையானவையாக இருக்க வேண்டும்.

* பயிற்சி முடிந்தவுடன், ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிக் கொண்டே, மிக உற்சாகமாக, சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறிக்கொண்டே கண்களை மெதுவாகத் திறக்கவும்.

நம்மில் பலருக்கு அலாரம் அடிக்கும் முன்னே அல்லது அடித்து முடிக்கும் முன் எழும் பழக்கம் இருக்கக்கூடும். அதேபோல் பயிற்சி ஆரம்பிக்கும் போது நம் மனத்திற்குள் குறிப்பிட்ட நிமிடப் பயிற்சி என்று சொல்லி விட்டால் போதும்.


பயிற்சியில் பதிவு செய்ய சில எடுத்துக்காட்டுகள்:
* நான் எப்பொழுதும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் இருப்பேன்

* இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது-

* என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி சரியான முறையில் வேலை செய்து என்னை ஆரோக்கியமாக வைக்கும்.

* நான் என்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்வேன்.

* எனக்கு உடற் பயிற்சி செய்வது மிகவும் பிடிக்கும்.

* நான் என் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவேன்.

பதிவு செய்யும் தகவல்களை விருப்பம்போல் அமைத்துக் கொள்ளலாம். அதேபோல், ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு விஷயம் என ஆரம்பித்து, பின் நாட்களைக் குறைத்தோ அல்லது கூட்டியோ கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் இந்தப் பயிற்சி தனியான அமைதியான இடத்தில் செய்ய ஆரம்பித்து, பின் இதை நாம் பயணம் செய்யும்போது கிடைக்கும் நேரத்திலோ, வேலையின் இடையில் கிடைக்கும் சில நிமிடங்களிலோ கூட செய்யலாம். சில நிமிடங்கள் கண்ணை மூடிச் செய்யும் பயிற்சி பொதுவாக மற்றவர்கள் பார்வையிலும் கவனிப்புக்குரியதாகாது.

சம தரையில் படுத்துக்கொண்டு, கண்களை மூடி உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் கவனம் செலுத்துதல் மற்றும் அதை அன்பாக நேசிப்பதாக உணர்வது என்பது போன்ற சுயமனோவசிய பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருப்பதால் பல யோகா மையங்களில் இப்பொழுது இது பயிற்றுவிக்கப்படுகிறது-

இந்த எளிய பயிற்சி மூலம் மிகப் பெரிய வெற்றி அடையலாம் முயற்சி செய்யுங்கள்.

பிராணயாமம்.


அன்பு நண்பர்களே,
வணக்கம்.                     
     இங்கு யோகா பற்றி தெரிந்து கொள்வோம்.



பிராணயாமம்.

ஆசனங்கள் அனைத்திற்கும் மூலாதாரம் பிராணயாமம்

பிராணாயமம் = பிராணன் + அயாமம் (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்)

மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும்.

குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவன்களுக்கு ஆயுட்காலம் அதிகம்.

முயல் 1 நிமிடத்திற்கு 38 தடவை மூச்சு விடுகிறது. அதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள்தான். ஆமை 1 நிமிடத்திற்கு 5 தடவை மூச்சு விடுகிறது. அதன் ஆயுட்காலம் 155 ஆண்டுகள்.

மனிதன் 1 நிமிடத்திற்கு 18 தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை சுவாசித்தால் அவன் ஆயுட்காலம் இரட்டிப்பாகும். கோபம், தாபம், மன அழுத்தம் அதிக உணர்ச்சிகள் உடைய மனிதன் மிகவும் வேகமாக சுவாசிக்கின்றான். இதனால் அவன் நோய்வாய்ப்படுகிறான். மூச்சுப் பயிற்சியால் நோய் நொடி அகலும். ஆயுள் நீட்டிக்கும். பொதுவாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூன்றில் ஒரு பங்கு நுரையீரலைத் தான் நிரப்புகிறது. மூச்சுப் பயிற்சியால் நுரையீரல் முழுதும் நிரம்பினால், பிராணவாயு அதிகம் கிடைத்து மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபக சக்தி மிகும். படிப்பாற்றல், புத்திசாலித்தனம் கூடும். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். நுரையீரல் வியாதிகளைத் தடுக்கலாம்.


மூச்சை உள்ளிழுத்தல்பூரகம்4 செகண்டுகள்
மூச்சை தக்கவைத்தல்கும்பகம்16 செகண்டுகள்
மூச்சை வெளியே விடல்ரேசகம்8 செகண்டுகள்


இந்த மூன்று பயிற்சியினுடைய விகிதம் 1 : 4 : 2 இருத்தல் சாலச் சிறந்தது.

இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை.

வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை.

இடது மூக்குத் துவாரத்தின் வழி மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழி வெளிவிடுவது சுழுமுனை.

இடகலை = குளிர்ச்சி ; பிங்கலை = சூடானது. சுழுமுனை பிராணவாயுவை அதிகம் நுரையீரலில் தக்க வைக்கும். காரணம் இடது நாசியிலிருந்து சுவாசப் பையின் தூரம் 16 அங்குலம். வலது நாசியிலிருந்து சுவாசப்பையின் தூரம் 12 அங்குலம். இடது நாசியால் இழுத்து வலது நாசியால் வெளிவிடும் பொழுது 4 அங்குலம் மூச்சு (பிராணவாயு அதிகம் உள்ள மூச்சு) நுரையீரலில் உள் தங்குகிறது. இது இரத்தத்தை சுத்தி செய்யும். பிராண சக்தியை அதிகரிக்கும்.

பிராணாயாமம் அட்டாங்க யோகத்தின் நான்காம் யோகமாகும்.

(1) பஸ்திரிகா பிராணயாமம் ; செய்முறை.

தியானம் போல் இடம், ஆசனம், மற்றைய நியதிகள் இருக்கட்டும்.
பிராணயாமம் செய்யும் பொழுது மூச்சோடு மனம் ஒன்ற வேண்டும்.
மூச்சை வெளிவிடும் பொழுது வயிறு மட்டும் சுருங்க வேண்டும்.
மூடிய கண்கள் மூக்கின் நுனியைப் பார்த்தபடி இருக்கட்டும்.
மூச்சை இயல்பாக விட வேண்டும்.
வலது கைப் பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியால் மூச்சை முடிந்தவரை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளிவிடவும். பின் வலது நாசி வழியாக மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல், வலது நாசியை அடைத்துக் கொண்டு மூச்சை இடது நாசி வழியாக வெளிவிடவும். இப் பயிற்சியை 5-10 தடவைகள் செய்தால் போதுமானது.

(2) கபாலபதி பிராணயாமம் ; செய்முறை.

இரண்டு மூக்குத்துவாரங்களிலும் மூச்சை வேகமாக உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் உடனே அதிவேகமாக வெளிவிடவும். இப் பயிற்சியை 5-10 தடவைகள் செய்யவும்.

(3) உஜ்ஜயி பிராணயாமம்.

இரண்டு மூக்குத் துவாரங்களிலும் ஒரே நேரத்தில் மூச்சை முடிந்தவரை உள்ளுக்கிழுத்து (4 செகண்டுகள்) பின் அப்படியே மூச்சை உள் நிறுத்தி (16 செகண்டுகள்) பின் நிதானமாக மெதுவாக வெளிவிடுதல் வேண்டும் (8 செகண்டுகள்).

ஆசிபா (ABS) பயிற்சி

ஆசனவாய், சிறுநீர்ப்பை, பாலியல் உறுப்புகள் அனைத்தும் ஒரே நரம்பினால் எஸ் – 2 (S 2 Segment) இயக்கப்படுகிறது. ஆசனவாயை சுருக்கி, விரிவடையச் செய்யும் பயிற்சியால் அந்த நரம்பு வலுவடைகிறது. பயிற்சியால் பெண்கள் பாலியல் உறுப்புகள் கட்டுப்பாடும், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் (Uterine Prolapse) தடுப்பும் பெறுகிறார்கள். சிறுநீரை அடக்குதல் சுலபமாக சாத்தியமாகிறது. ஆண்களுக்கு நீர்த்தாரை கட்டியால் (Prostate) ஏற்படும் முதுமைக்கால நீர்க்கசிவு, கட்டுப்பாடின்மை குறைகிறது. விந்துக் கசிவும் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆசிபா செய்முறை :

கால்களை கொஞ்சம் அகல விரித்து, நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ ஆசனவாயை மெதுவாகச் சுருக்கி, பின் விரித்து 10 தடவை பயிற்சி செய்யவும். இப் பயிற்சி செய்யும் பொழுது, மனம் பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். பயிற்சி கஷ்டப்படாமல் இயல்பாக செய்யப்பட வேண்டும். பயிற்சி முடிவில் உஜ்ஜயி பிராணயாமம் செய்யவும். கைகளைக் கும்பிடுவது போல் மேல் தூக்கி மூச்சை இரண்டு நாசிகளாலும் நாலு செகண்டுகள் உள்ளிழுத்து பதினாறு செகண்டுகள் நிறுத்தி பின் எட்டு செகண்டுகள் மெதுவாக வெளிவிடவும்.

ஆசிபா பயிற்சியை ஐந்து முறையும் மாலையில் ஐந்து முறையும் செய்யவும்.
ஆ : ஆசனவாய். சி : சிறு நீர்ப்பை: ப : பாலியல் உறுப்புகள்

A : Anus, B : Bladder, S : Sexual organs.

எல்லாப் பயிற்சிகளுக்கும் பொது நியதிகள்:

1. பயிற்சிக்காலம் முழுதும் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
2. காற்றோட்டமான இடத்தில் பயிற்சி செய்தல் நலம்.
3. பயிற்சியில் மனம் லயிக்க வேண்டும். (ஒருமை உணர்வு)
4. முக மலர்ச்சியுடன் பற்றுவைத்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
5. மூச்சை இயல்பாக விட வேண்டும்.
6. இரண்டு பயிற்சிகளுக்கு நடுவில் குறைந்தது 5 நிமிட இடைவெளி தர வேண்டும்.
7. பயிற்சி தொடங்குமுன் தசைகளை தளர்த்தி இயல்பாக மூச்சுவிட வேண்டும்.
8. மூச்சுப் பயிற்சியின்போது இருதய, நுரையீரல் நோயாளிகள் அதிக நேரம் மூச்சை இழுத்து, உள்நிறுத்தி ‘தம்’ கட்டுவது தவறு. ஆபத்தாகும்.
9. பயிற்சி முடிந்ததும் உடனே எழுந்து வேறு வேலை செய்வது நல்லதல்ல. குறைந்தது பத்து நிமிடம் ஓய்வு தேவை. விரும்பினால் சாந்தி யோகம் செய்யலாம்.
10.பயிற்சிகள் முடிந்த பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
11.இளைஞர்கள் விளையாடுவதற்கு முன் இப் பயிற்சிகளை ஒரு ஆரம்ப
தயார் நிலை (Warm up) பயிற்சியாக செய்வது சிறந்த பலனைத்தரும்.

ஆழ்மன சக்தி

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள்


ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை...
1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும்.
2. Extra Sensory Perception (ESP) எனப்படும் நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது.
3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனத்துக்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது.
4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி.
5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது.
6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி.
7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி.
8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது.
9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி.
ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.

ஆல்ஃபா

ஆல்ஃபா


        ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை “ரிலாக்ஸ்” (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம். சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா  அலைவரிசையில் இருந்து பாருங்கள்.

27நட்சத்திரங்களுக்கு உரிய தெய்வங்கள்

அன்பு நண்பர்களே,

      வணக்கம்.இது தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்.

 

 

27 நட்சத்திரக்காரர்களுக்கும் உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்


அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
மிருகசீரிடம்-ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை- ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
அஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம்- ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம்-ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி-ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

தையற்கலை.

அன்பு நண்பர்களே,
     வணக்கம். தையற்கலை பற்றி இங்கு காண்போம்.



               உடலமைப்பிற்குத் தகுந்தபடி உடைகளை வடிவமைப்பதே தையற்கலை. உடையின் பொருத்தம் என்பது உடம்பின் தன்மையுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. எனவே உடற்கூறு இலக்கணம் என்கிற உடல்புறத் தோற்றவியலைப் பற்றி முதலில் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது.

உருவ அமைப்புகள்
உடலமைப்பின் புறத்தோற்றமானது ஒவ்வொருடைய உடலமைப்பிலும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக உயரம், மார்புச் சுற்றளவு, இடுப்புச் சுற்றளவு, புட்டச் சுற்றளவு எனும் இம்மூன்றின் அளவுகளின் தன்மையில் காணப்படும்.

            பெண்களைப் பொறுத்தளவில் மார்பக அளவுகளில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன. பொதுவாக 5' 4" இருக்கும் உயரமான ஒரு பெண்ணின் மார்பு - 34", இடுப்பு - 28", புட்டச் சுற்றளவு - 36" என்பதே விகிதச் சம உருவத் தன்மையாகும்.

                       இதை நிலையான உருவம் என்று கூறலாம். இந்த உருவத்தின். விகிதச் சமமின்மை என்பது மார்பு, இடுப்பு, புட்டம் சுற்றளவுகளின் தன்மையானது மேற்குறிப்பிட்டுள்ள விகித சம அளவிற்கு மாறுபட்டு இருக்கும். சற்று தடிமனான உருவத்தில் மார்பு அளவு 34", இடுப்பு 30", புட்டம் 39" என்றிருக்கும். ஒல்லியான உருவத்தில் மார்பு 34", இடுப்பு 26", புட்டம் 34" என்றிருக்கும். மிகவும் சதைப்பற்றுள்ள உருவத்தில் மார்பு 38", இடுப்பு 34", புட்டம் 44" என்றுமிருக்கும்.

                   பொதுவாக எலும்பு மண்டலத்தின் மேற்புறமாகப் போர்த்திய வடிவில் அமையப்பட்டிருக்கும் தசை நார்களின் தோற்றத்தினால்தான் உருவ அமைப்புகளின் தன்மைகளானது நிர்ணயிக்கப்படுகிறது. நிலையான உருவம் என்பதும், விகித சம உருவம் என்பதும் எடுத்துக்காட்டான உருவம் என்பதும் ஒரே உருவம் ஆகும். இத்துடன் சேர்த்து ஒல்லியான உருவம், தடிமனான உருவம், கொழுத்த சரீரமுடைய உருவம் என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

                          பெண்களின் புறத்தோற்ற அமைப்பு என்பது அவர்களுடைய பாரம்பரியத்தினைச் சார்ந்து அமையலாம் அல்லது அவர்களது உணவுப் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலும் அமையலாம்.

                    உடலில் சதைப்பற்று மிகுதியான பகுதிகளாக மார்பு, இடுப்பு, புட்டம், தொடை பாகங்களில் ஏற்படும் தசை நார்களின் தன்மையும், கொழுப்புச் சத்து மிகுதியாலும் உடல் தோற்றம் பருமனாக இருக்கிறது. சீரான உடல்வாகு பெற தினமும் உடற்பயிற்சி மேற்கோள்வது அவசியம்.

பக்கவாட்டுத் தோற்றம்
             ஒருவர் நிற்கும் நிலையில், பக்கவாட்டுத் தோற்றத்தினைக் கவனிக்கும் போது நிலையான உருவம், நிமிர்ந்த உருவம், முன் நோக்கி வளைந்த உருவம், கூன் முதுகு அமைப்பு உருவம், அகன்ற தோள்பட்டையுடன் கூடிய குறுகலான மார்பக அமைப்பு கொண்ட உருவம், குறுகிய தோள்பட்டையுடன் கூடிய அகன்ற மார்பக அமைப்பு கொண்ட உருவம் போன்ற உருவ அமைப்புகளைக் காண முடிகிறது.

                     தோள்பாக அமைப்பு நிலையானதாக அமைந்திருக்கும். சில உருவத்தில் முன் நோக்கி வளைந்த தோள்பட்டை, உயர்ந்த தோள்பட்டை, சரிந்த தோள்பட்டை போன்ற அமைப்புகளுக்குத் தகுந்தாற் போல உடையின் தோள் பாகத்தில் சாய்வு நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் உடலின் தன்மைக்குப் பொருந்தக் கூடிய உடைகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

கால்களின் அமைப்பு
               கால்களின் அமைப்புகளில் நிலையான கால்கள் அமைப்பு, அகன்ற கால்களின் அமைப்பு, தொடைச் சதைப்பற்று அதிகமான கால்களின் அமைப்பு என்பவை காற்சட்டைகளுக்கான அளவுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

புறத் தோற்றம்
                      உடலை அதன் புறத்தோற்ற அமைப்பைக் கொண்டு நான்கு விதமாகப் பிரிக்கலாம். அவை
1. ஆப்பிள் வடிவம்
2. செவ்வக வடிவம்
3. மணி வடிவம்
4. பகுக்கப்படாத வடிவம்

உருவம் என்பதைப் பார்க்கும் போது 36"-29"-38" என்று முறையே மார்பு - இடுப்பு - புட்டம் அளவுகள் இருப்பதே சரியான உருவம் என்று ஒரு புள்ளியியல் ஆய்வு தெரிவிக்கிறது.

எட்டு தலைக் கொள்கை
               உடலின் அமைப்பில் பருவ வயதினை அடைந்த பெண்ணின் முழு உயரத்தில் தலை முதல் கால் பாதம் வரையில் எட்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
1. தலை முதல் முகவாய்க்கட்டு வரை
2. முகவாய்க்கட்டு முதல் நடு மார்பு வரை
3. நடு மார்பு முதல் இடுப்பு வரை
4. இடுப்பு முதல் புட்டம் வரை
5. புட்டம் முதல் தொடை நடுப்பாகம் வரை
6. தொடை நடுப்பாகம் முதல் கால் முட்டி வரை
7. கால் முட்டி முதல் கெண்டைக்கால் வரை
8. கெண்டைக்கால் முதல் காலின் பாதம் வரை

இவை தையல் தொழில்நுட்பத்தில் உடலின் எட்டு தலைக் கொள்கைகள் என்று சொல்லப்படுகின்றன.

எட்டு தலைக் கொள்கையின் பயன்

இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் உடைகளுக்கான உயர அளவுகள் கணக்கிடப்படுகிறது. பருவப் பெண்ணின் முழு உயரம் 5 அடி 4 அங்குலம் (5' 4"). இதை எட்டால் வகுத்தால் ஒரு பிரிவு என்பது 8 அங்குலம். அதாவது

5 அடி 4 அங்குலம் = 5' 4" x 12 =60"+4" = 64"

இதை எட்டால் வகுத்தால் 64"/8 = 8"

இது ஒரு தலைக் கொள்கையாகும். இந்த கணக்கீட்டின் அடிப்படையில்தான் உடைகளுக்கான நீள அளவுகள் நிர்ணயிக்கப்படுகிறது.

சில உடைகளுக்கான நீள அளவுகள்
இந்த எட்டுதலைக் கொள்கையின் அடிப்படையில் சில நீள அளவுகள் நிர்ணயிக்கப்படுகிறது.

மேல் சட்டை உடை
ரவிக்கை, ப்ளவுஸ், கட் - ஜாக்கெட், சோளி முதலியவற்றுக்கு 1 3/4 (1.75அளவு) தலைக் கொள்கை அளவு முழு நீள அளவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி

1.75 x 8" =14" அதாவது 14 அங்குலம். இதுவே மேல் சட்டையின் முழு நீளமாகும்.

முழு இரவு நேர உடை
முழு நைட்டி எனப்படும் முழு இரவு நேர உடைக்கு 7 1/2 (7.5 அளவு) தலைக் கொள்கை அளவு கடைப்பிடிக்கப்படுகிறது.

7.5 x 8" = 60" . அதாவது 60 அங்குலம். இதுவே முழு இரவு நேர உடையின் முழு நீளமாகும்.

மேல் உள்ளாடை
சுமீஸ் / டாப்ஸ் எனும் உடையான மேல் உள்ளாடைக்கு மூன்று விதமான அளவுகள் க்டைப்பிடிக்கப்படுகிறது.

கூடுதல் உயரம்- 5 தலைக் கொள்கை

5 x 8" = 40". அதாவது 40 அங்குலம். முழுநீள அளவாகும்.

நடுத்தரமான உயரம்- 4 1/2 (4.5அளவு) தலைக் கொள்கை
4.5 x 8" = 36". அதாவது 36 அங்குலம். முழுநீள அளவாகும்.

கூடுதல் உயரம்- 4 தலைக் கொள்கை
4 x 8" = 32". அதாவது 32 அங்குலம். முழுநீள அளவாகும்.

சுடிதார் பாட்டம் உடை
சுடிதார் பாட்டம் உடைக்கு 5 தலைக் கொள்கையாகக் கணக்கிடப்படுகிறது.

5 x 8" = 40". அதாவது 40 அங்குலம். முழுநீள அளவாகும்.

பைஜாமா, சல்வார், பாட்டியாலா பைஜாமா, டோத்தி சல்வார், பேண்ட், முழுக்கால் சட்டை போன்றவற்றிற்கும் இந்த அளவே பொருத்தமானதாக இருக்கிறது.

பிற உடைகள்
சிலாக் உடைகளுக்கு 3 1/2 (3.5 அளவு) தலைக் கொள்கை

3.5 x 8" = 28". அதாவது 28 அங்குலம். முழுநீள அளவாகும்.

சட்டை உடைகளுக்கு 3 3/4 (3.75 அளவு) தலைக் கொள்கை

3.75 x 8" = 30". அதாவது 30 அங்குலம். முழுநீள அளவாகும்.

ஆய்வக மேலாடை (லேப் கோட்) உடைகளுக்கு 4 தலைக் கொள்கை
4 x 8" = 32". அதாவது 32 அங்குலம். முழுநீள அளவாகும்.

அரைக்கால் சட்டை 1 3/4 (1.75) தலைக் கொள்கை
1.75 x 8" = 14" . அதாவது 14 அங்குலம். முழு நீள அளவாகும்.

பெர்முடாஸ் எனப்படும் காலின் முட்டிப் பாகம் வரை ஆடைக்கு  1/4 (2.25 அளவு) தலைக் கொள்கை

2.25 x 8" = 18". அதாவது 18 அங்குலம். முழு நீள அளவாகும்.

தையல் கலையில் இது போன்ற கணிதப் பங்கீடுகள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

அளவீட்டு முறைகள்

உடைகளுக்கு நேரடியாக அளவெடுக்கும் போது இரண்டு வகையான அளவு முறைகள் பின்பற்றப்படுகிறது.

1. பிரிட்டிஷ் அளவு முறை

2. மெட்ரிக் அளவு முறை

பிரிட்டிஷ் அளவு முறையில் அங்குலம் அளவாகக் கணக்கெடுக்கப்படுகிறது.

அதாவது ஒரு அங்குலம் (Inch) எட்டு சம அளவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
1. எட்டில் ஒரு பங்கு= 1/8 "
2. எட்டில் இரு பங்கு= 2/8 " அல்லது 1/4 "
3. எட்டில் மூன்று பங்கு= 3/8 "
4. எட்டில் நான்கு பங்கு= 4/8 " அல்லது 1/2 "
5. எட்டில் ஐந்து பங்கு= 5/8 "
6. எட்டில் ஆறு பங்கு= 6/8 " அல்லது 3/4 "
7. எட்டில் ஏழு பங்கு= 7/8 "
8. எட்டில் எட்டு பங்கு= 8/8" அதாவது 1"

இந்த பிரிட்டிஷ் அளவு முறையில்
12 அங்குலம் சேர்ந்தது ஒரு அடி (feet)
36 அங்குலம் சேர்ந்தது ஒரு யார் (கெஜம்)
என்பதான அளவுகளாக இருக்கிறது.

மெட்ரிக் அளவு முறை

மெட்ரிக் அளவு முறையில் சென்டி மீட்டர் அளவாகக் கணக்கிடப்படுகிறது.

இந்த முறையில் ஒரு சென்டி மீட்டர் பத்து சம அளவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இந்த பத்து சம அளவு ஒவ்வொன்றும் மில்லி மீட்டர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மெட்ரிக் அளவு முறையில்
10 மில்லி மீட்டர் சேர்ந்தது 1 சென்டி மீட்டர்
100 சென்டி மீட்டர் சேர்ந்தது 1 மீட்டர்
100 மீட்டர் சேர்ந்தது 1 கிலோ மீட்டர்
என்பதான அளவுகளாக இருக்கிறது.

அளவு மாற்றம்

தற்போது மெட்ரிக் முறை அளவுகள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பிரிட்டிஷ் அளவு முறையிலிருந்து மெட்ரிக் முறைக்கு மாற்றம் செய்ய கீழ்காணும் கணக்கு பயன்படுத்தப்படுகிறது.

1 அங்குலம் = 2.54 செ.மீ
1 அடி = 30.5 செ.மீ
1 கெஜம் = 91 செ.மீ

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்ததால் பிரிட்டிஷ் அளவு முறை பயன்படுத்தப்பட்டு வந்ததால் பிரிட்டிஷ் முறை இன்னும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடைகளுக்கு அளவெடுக்கப் பயன்படுத்தப்படும் அளவு நாடாவின் ஒரு புறம் பிரிட்டிஷ் அளவு முறையும் மறு புறம் மெட்ரிக் அளவு முறையும் கொண்டதாகவே கிடைக்கிறது. பிற நாடுகளில் மெட்ரிக் அளவு முறை பயன்பாட்டில் இருக்கின்றன.

இன்றைய நிலையில் இந்தியாவில், உடை தயாரிக்கும் கல்வி கற்பவர்கள் மற்றும் கற்றவர்கள் மெட்ரிக் அளவு முறையும், தையலை அனுபவப் பூர்வமாகக் கற்றுக் கொண்டவர்கள் பிரிட்டிஷ் அளவு முறையையும் பயன்படுத்துகின்றனர். ஏற்றுமதி உடை தயாரிப்பு நிறுவனங்களில் இரண்டு அளவு முறைகளுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு அளவு முறைகளையும் தெரிந்து கொள்வது நல்லதாக இருக்கிறது.

மேலே சொல்லப்பட்ட அளவு மாற்ற முறைகளைக் கொண்டு, அளவுப் பங்கீட்டு முறையைப் பயன்படுத்தி உடைகளைத் தயாரிக்கலாம். உடைகள் தயாரிப்பில் ஓரளவு அனுபவம் பெறுவதற்கு முன்பு தாள்களில் (Paper) பயிற்சி செய்து பார்த்து, அதன் பின் துணிகளில் துவங்கலாம்.

சுடிதார் தைக்கும் முறை

அன்பு நண்பர்களே,வணக்கம்.
இங்கு தையல் கலையின் தொடர்ச்சி.............காண்போம்.



சுடிதார் தைக்கும் முறை
1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

முன்பக்கம்: (படம் 3)

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.

2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.
பின்பக்கம்: (படம் 4)

1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.

2. கை ஓரம் மடித்து தைக்கவும்.

3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.

4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.


5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்துதைக்கவும் (படம் 5)
1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 6-ல் உள்ளபடி வரைந்து வெட்டவும்.
2. வெட்டிய பின் மீதமுள்ள துணியை இரண்டாக மடித்துப் போட்டு படம் 7-ல் உள்ளபடி வெட்டவும். துணியின் நீளவாக்கில் ஒருபக்கம் நாடா நுழைக்க மடித்துத் தைக்கவும்.
3. படம் 6-ன்படி வெட்டிய துணியின் முன்பக்கமும், பின்பக்கமும் படம் 8-ல் உள்ளபடி fril கொடுத்து தைக்கவும். காலின் கீழ்பகுதியை 1" மடித்து தைக்கவும்.
4. படம் 7-ல் உள்ள துணியின் இரு நுனியையும் சேர்த்துத் தைக்கவும்.
5. படம் 7ஐயும், படம் 6ஐயும் சேர்த்து படம் 8-ல் உள்ளபடி தைக்கவும்.


தையல் இயந்திரம்

தையல் இயந்திரம் பற்றிய சில விளக்கங்கள்:
எலக்ட்ரானிக் தையல் மெஷின்:
எலக்ட்ரானிக் தையல் மெஷின்களில் பைப்பிங், பைண்டிங், ரஃப்ள்ஸ், பிளீட்டிங், டார்னிங், ஹொம்மிங், பட்டன் துளை போடுவது போன்ற பற்பல வேலைகள் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் நடைபெறுகின்றன.


எந்த ஒரு தையல் மெஷினிலும் அடிப்படைத் தேவை என்னவென்றால், அதன் நூல் மேலும் கீழும் ஏறி இறங்கி தையல் போடும் வகையில் ஊசியும், ஷட்டிலும் துல்லியமான நேரப்படி இயங்கவேண்டும். மெஷின் பிரஷர் ஃபுட் துணியை உரிய இடத்தில் வைத்து, முன்புறம் நகர்த்தி, ஷீம்மை உருவாக்குகிறது.
லாக் தையல் மெஷின்:
உலகெங்கும்  அதிக அளவில் ஒற்றை ஊசி லாக் தையல் மெசின்தான் பயன்படுத்தப்படுகிறது.சங்கிலித் தையல் மெஷின்களும், ஒவர் எட்ஜ் தையல் மெஷின்களும் பொதுவாக பின்னல் வேலைகளுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

தையல் மெஷினை எவ்வாறு இயக்குவது என்ற அடிப்படைத் தவகல்களை தெரிந்து கொண்டால், எந்த தையல் மெஷினையும் சரியான முறையில் பயன்படுத்தி, தையல் கோளாறுகளை சரிசெய்ய முடியும்.
சாதாரண லாக் தையல் மெஷினை தட்டை படுகை தையல் மெஷின் என்றும் சொல்கிறார்கள். அது நேராக மட்டுமே தையல் போடுகிறது.

லாக் தையல்:
இருபுறங்களில் இருந்தும் தையல் ஒரே மாதிரியாகத் தெரிகிறது. மிகவும் தட்டையாக முற்றிலும் பாதுகாப்பானதாக, அவ்வளவாக வெளியில் தெரியாமல் தையல் இருக்கிறது. உடையைப் பயன்படுத்தும்போது நூல் அறுந்தால் கூட தையல் பிரிவதில்லை. ஏனென்றால், இரண்டு நூல்களும் ஒன்றுடன் ஒன்று (இறுக்கமாக பிணைந்து) லாக் ஆகியுள்ளன.

எனவேதான் இத்தகைய தையல் லாக் தையல் என்று அழைக்கப் படுகிறது. மேலே உள்ள ஸ்பூலில் இருந்து வெளிப்படும் ஊசிநூலும், கீழே உள்ள பாபினில் இருந்து வெளிப்படும் பாபின் நூலும் பிணைந்து லாக் தையல் விழுகிறது.

சரியாக தையல் விழும்போது, மேலிருந்தும் கீழிருந்தும் சமமான அளவுக்கு நூல் பயன்படுத்தப்படுகிறது. துணியின் மத்தியில் நூல்கள் லாக் ஆகின்றன.

லாக் தையல் மெஷின் வகைகள்:
இரண்டு வகையான லாக் ஸ்டிட்ச் மெஷின்கள் உள்ளன. அவைகள், ஒன்று சாதாரண தையல் மெஷின், காலால் இயக்க கூடியது. மற்றொண்டு லாக் ஸ்டிட்ச் பவர் தையல் மெஷின் என்பது. சாதாரண கறுப்புக் கலர் லாக் ஸ்டிட்ச் (பழைய)தையல் மெஷினிற்கும், பவர் மெஷினான வெள்ளைக் கலர் லாக் ஸ்டிட்ச் தையல் மெஷினிக்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன.

அவைகள்:
1. வெள்ளை நிற பவர் தையல் மெஷின் மிகவும் விரைவானது. அது சராசரியாக ஒரு நிமிடத்தில் 5000 தையல்கள் போடுகிறது. ஆனால், சராசரி கறுப்பு நிற சாதாரண தையல் மெஷினோ 800 தையல்களுக்கு மேல் போடுவதில்லை. அதேவேளையில் கைத்தையல் மெஷின் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக 300 தையல்கள் மட்டும் தான் போடுகிறது.

2. பவர் தையல் மெஷினில், நீடில் லிஃப்ட் மூலம் (Presser Foot) பிரஷர் ஃபுட் கட்டுப்படுத்தப் படுகிறது. ஆனால், சாதாரண கறுப்பு நிற வீட்டுத்தையல் மெஷினில், நீடில் பாருக்குப் பின்னால் உள்ள ஒரு (Presser Foot Lifter) லீவரைப் பயன்படுத்தி இது கையால் இயக்கப்படுகிறது.

3. சாதாரண தையல் மெஷினில் உள்ள (Throat Plate) த்ரோட் பிளேட், ஷீம் கைடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் இது தொழிற்சாலை தையல் மெஷினில் இருப்பதில்லை .

4. பவர் மெஷினில் (Presser Foot) பிரஷர் ஃபுட்டுக்கு இரண்டு பெரு விரல்களுக்கு இடையே குறுகலான திறப்புதான் உள்ளது. இது துணியை உறுதியாகவும், இறுக்கவும் பற்றுகிறது.

5. பவர் மெஷினில் உள்ள பிளேட்டில் உள்ள (Throat Plate) த்ரோட் பிளேட்டில் சிறிய உருண்டையான ஊசித்துளை உள்ளது. சாதாரண தையல் மெஷினில் இது பெரிதாகவும் ஓவல் வடிவிலும் உள்ளது. இதனால் தையல் பிரச்சனைகள் குறைகின்றன.

சாதாரன தையல் மெஷினின் பாகங்கள்:

கருப்பு தலை மெஷின்:

தையல் கலையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், பவர் தையல் மெஷினின் வெவ்வேறு பாகங்களைப்   பற்றிப்  புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

1 .ஹான்ட் வீல்: மெஷினின் வலது புறத்தில்  ஹேன்ட் வீல் உள்ளது.  சாதாரண தையல் மெஷின். இது கையால் அல்லது பெல்ட்டால் சுழற்றப்படுகிறது. பவர் தையல் மெஷினில் இது பெல்ட்டினால் இயங்குகிறது. தையல் இயந்திரத்தில் நீடில் பாரின் இயக்கத்தை இது கட்டுப்படுத்தி, மெஷினை சீராக ஓட்டுகிறது.

2 . இயக்கம் நிறுத்தம் ரவுன்ட்: இது மெஷினின் வலது ஓரத்தில் சுற்றுர்ம சக்கரத்தை ஒட்டி அமந்திருக்கும். இந்த  ஸ்குருவை இறுக்கமாக (இடமிருந்து வலமாக) மூடினால்  சக்கரம் சுற்றி மெஷின் தைப்பதற்கு உதவுகிறது. இதை வலமிருந்து இடமாக திருகி தளர்த்தினால் சக்கரம் சுற்றும் .ஆனால் தைக்க முடியாது ; நூல் சுற்றலாம் , இப்படியாக இந்த ஸ்குருவை  தளர்த்தியும் , தைக்கும் போது இறுக்கமாக மூடியும் தையல் இயந்திரத்தை இயக்கலாம்.

3 . பிரஷர் புட் (Presser Foot): தைக்கும் போது துணியை (Feed Dogs) பீட் டாக் உடன் இணைந்து பற்றிக்கொள்வதுடன் நேராக தைப்பதற்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.  இதைக் கழற்றி தேவைக் ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளலாம். வெவ்வேறு வேலைகளுக்கு ஜிப்பர்  புட் , பிளாஸ்டிக் புட்  என்று வெவ்வேறு வகை (Foot) புட்கள் உள்ளன.

4 . பிரஷர் புட் லிப்ட்டர் (Presser Foot Lifter): மேலும் கீழும் தூங்குவதற்காக பிரஷர் புட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு லீவர். துணியைத் தைப்பதற்கு தொடங்கும்போது பிரஷர் புட் லிப்ரரைத் தூக்குவதன் மூலம் “பிரசர் புட்”  மேலெழும். அதன் போது நீடில் பிளெட்டிற்கும் பிரசர் பூட்டிற்கும் இடையில் துணி வைக்கக் கூடியதாக இடைவெளி ஏற்படுகின்றது.

5  நீடில் பிளேட்: இது ஒரு அரை வட்டத்  தட்டு , இதில் உள்ள துளை வழியாக நூல் கடந்து செல்கிறது . தையலின் போது வழிகாட்டியாக செயல்படுகிறது.

6 . நூல் இறுக்கி (டென்ஷன் யூனிட்): மேல்  நூலின் இறுக்கத்தையும் , தையல்களின் தரத்தையும் கட்டுப்படுத்தும்  ஒரு அமைப்பு .

நூல்ப் பந்தில் இருந்து வரும் நூலானது நூல் தொய்வடையாது இருப்பதற்காக அதற்கென அமைக்கப்பெற்ற நூல் (கைடு)தாங்கிகள் ஊடாகவந்து இந்த நூல் ரென்ஷன் யூனிற்றில் இடையே உள்ள இரண்டு டிஸ்க்குகளுக்கு இடையில் செல்கின்றது. அதன் பின் நூலானது திரேட் டேக் அப் லிவர் ஊடாக ஊசிக்கு செல்கின்றது.
டிஸ்க் இரண்டிற்கும் இடையில் உள்ள பிரஷரை கட்டுப்படுத்த ஸ்பிரிங் மற்றும் நட் உதவியால் நூலின் இறுக்கம் சரி செய்யப் படுகிறது.

7 . நூல் இழுக்கும் (திரேட் டேக் அப்) லீவர் (Thread Take-up Liver): இது ஒரு முக்கியமான பாகம். இது தைக்கும்போது மேலும் கீழும் ஆடிக்கொண்டிருக்கும். இதன் வழியாக நூலைக் கோர்த்து தைக்கும் போது நூலானது, நூல் டென்ஷன் யூனிடில் இருந்து நூலை இழுத்து எடுப்பதுடன் ஊசியில் உள்ள நூலும் அளவான ரென்சனுடன் கீழ் நூலை பிணைத்து இழுக்க உதவுகின்றது.

நூலின் ரென்சன் கூடினால், தையலின் பிணைப்பு மேற்பக்கமாகவும், குறைந்தால் கீழ்ப்பக்கமாகவும் தெரியும். இது சரியான தையல் அல்ல.

பொவினில் இருந்து வரும் நூலும் குறிக்கப்பெற்ற இறுக்கத்துடன் மேலிருந்து வரும் நூலுடன் பிணைய வேண்டும். அப்போதுதான் தையல் ஒழுங்காக இருக்கும். கீழ் நூலை இறுக்குவதற்காக பொவின் வைக்கும் சட்டிலில் வெளிப்பக்கமாக பொருத்தப்பெற்றுள்ள தகட்டிற்கு இடையில் பொவினில் இருந்து வரும் நூலை மாட்டி எடுக்கப் படுகின்றது. சட்டிலில் இருந்து வரும் நூல் இறுக்கமாக அல்லது லூசாக இருந்தால் (வெளித் தட்டை அமத்தி சட்டிலுடன் பூட்டி இருக்கும்) ஸ்குறூவை திருப்புவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம்..

8. பீட் டாக் (Feed Dogs): பிரஷர் புட்டுக்கு கீழே உள்ள சிறிய உலோக சாதனம். இதில்  உள்ள பல் தைக்கப்படும்போது துணியை தையலின் அளவுக்கு தக்கதாக இழுத்து செல்கிறது . ஒவ்வொரு தையல் முடிந்ததும் இது ஒரு தையல் அளவுக்கு துணியை முன்னோக்கி நகர்த்துகிறது.


09 . நூல் கைடு (நூல் கொழுவி): நூல் தொவடைந்து சிக்குப்படாது இருக்க இதனூடு நூலை விடுதல் வேண்டும்.
தையல் டிப்ஸ்கள்
1. சுடிதார் தைக்கும் போது பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி லைனிங் கொடுத்து தைக்கவும்.

2. மெல்லியா ஆடையாக இருந்தால் பெண்களுக்கு நெளிந்து கூன் போட்டு நடக்க வேண்டி வரும்.

3. இப்படி தைப்பதால் ரொம்ப பிரியா நடக்கலாம்.
4. வயது வந்த பெண்களுக்கு எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள்.

5. நான்கு விரல் லூசாகா இருக்கும் அளவிற்கு தையுங்கள்.முக்கியமா கழுத்து சிறிய கழுத்தாக தைக்கவும்.

6. டெய்லரிடம் கொடுக்கும் போது சொல்லி கொடுங்கள்.

7. நெக் பெருசா வைத்தால் தான் நல்ல தைக்கவரும் என்று டெய்லர்கள் அவர்கள் இழ்டத்துக்கு வைப்பார்கள்.

8. விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது உள்ளே (பெரிதாக்கக் கூடியதாக ) பிரித்து பயன் படுத்தக் கூடியதாக துணி விட்டு தைக்கவும்.

9. காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது ஒரு நாள் முழுதும் தண்ணீரில் நனைத்து பிறகு காய்ந்ததும் அய்ர்ன் செய்து கொடுங்கள்.

10. அப்படியே தைக்க கொடுத்தால் ஒரு முறை போட்டு துவைத்து மறு முறை போடும் போது கை கூட நுழைக்க முடியாது.

11. காசு கரியானது தான் மிச்சம்.அதே போல காட்டன் லைனிங்க் கொடுத்து தைத்த சுடிதாரை அலசி காய வைக்கும் போது லனிங்க் பகுதியை திருப்பி நல்ல உதரி போட வேண்டும்.

12. நல்ல பகுதி பக்கம் காய வைத்தால் உள்ளே உள்ள காட்டன் துணி சுருங்கி நிற்கும் அயர்ன் செய்ய ரொம்ப டைம் எடுக்கும்.

பிளவுஸ் தைக்கும் போது
1. பிளவுஸ் தைக்கும் போது இடுப்பு பட்டிக்கு உள் பக்கம் கேர்ன் வாஸ் துணி கொடுத்து தைத்தால் நல்ல ஸ்டிஃப்பாக இருக்கும் அல்லது பிள்ளைகளின் ஸ்கூல் காட்டன் பேண்ட் துணியும் வைத்து தைக்கலாம்.
2.எப்போதும் கலர் துணியை உள்ளே வைத்து தைக்ககூடாது, அது குண்டாக இருப்பவர்களுக்கு மடங்கும் போது வெளியே தெரியும்.
துணிகளை வெட்டும் போது
துணிகளை வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி ஒரு பையில்வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால் கை, பட்டி, கழுத்து துணி எல்லாம் காணாமல் போய் விடும்.
யாருடனும் சண்டை போட்டு விட்டு, பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் உஷார் உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.
இல்லை என்றால் எப்படியும் ஒரு கையோ, பட்டி துணியோ காணாமல் போகும், இல்லை உங்கள் மேல் கோபமாக இருப்பவர்கள் அதை கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள்.
அடுத்து முன்று வயதுக்குற்பட்ட குழந்தைகளை வைத்து கொண்டு தைக்காதீர்கள்.
நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள்.
உடனே ஊசியால் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கு,
நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே போய் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கு.

துணி வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டதா?
1.பிளவுஸ் மற்றும் சல்வார் வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டால் கவலை பட தேவையில்லை, அதே போல் அரை இன்சுக்கு கழுத்து வரைந்து ஒட்டு கொடுத்து விட்டு ஒட்டு தெரியாமல் இருக்க லேஸ், அல்லது மணி, இல்லை ஜரிகை லேஸ் வைத்து தைத்து கொள்ளலாம் என்ன சல்வாரோ அத்ற்கு ஏற்றார் போல்.
2.அதே போல் சாதாரண சல்வார் கம்மீஸ் கூட கழுத்து , சைட் பகுதி, கையில் மணி அல்லது லேஸ் வைத்து தைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.
3.இப்போது யாரும் பட்டு சேலை அவ்வளவாக உடுத்தி கொள்வதில்லை வொர்க் வந்தது தான், மைசூர் சில்க் போன்றவை தான் கட்டு கிறார்கள்.
அப்ப பழைய பட்டு சேலையை கூட சல்வார் கம்மீஸாக தைத்து கொள்ளலாம்.

சில மருத்துவ குறிப்புகள்


அன்பு நண்பர்களே,வணக்கம்.

                 உடல் இளைத்து இருப்பதுதான் அழகு என்றுதான் பெரும்பாலான பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் சொல்லப்படுகிறது. ஆனால் சத்துக்களை குறைத்து உடலைஒல்லியாக்குவது தேவையற்றது. அது உடலை பலவீனமாகத்தான் ஆக்கும். உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சுக்கு தண்ணீர்

உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும். பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.

அருகம்புல் கசாயம்

நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமானவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.

முளைக்கட்டிய பயறு

பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.

சோற்றுக்கற்றாழை

தூதுவளை பொடியை தேனில் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி. இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

சோற்றுக் கற்றாழையை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

பேரிச்சை சத்துக்கள்

தேவையான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.

முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.

சிறுநீரக கல்-




      

அன்பு நண்பர்களே,வணக்கம். 

        இங்கு வீட்டு வைத்தியம் பற்றி காண்போம்.

         தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.
அறிகுறிகள் என்ன ?

முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.
தைராய்டு பிரச்சினை

பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.
5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.
ரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.
பெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வீட்டு வைத்தியம்

சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.
பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
வாழைத்தண்டு

முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
எதை சாப்பிடக்கூடாது?

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

காடை வளர்ப்பு



அன்பு நண்பர்களே,வணக்கம்.

     




 


 

        லட்சக் கணக்கில் செலவழித்து கோழிப் பண்ணை அமைப்பது என்பது எல்லா விவசாயிகளுக்கும் சரிப்பட்டு வருவதில்லை. அவர்களுக்கு ஏற்ற தொழில் காடை வளர்ப்பு தான். இதற்கு இட வசதி தேவையில்லை. ஒரு கோழி வளர்க்கிற இடத்தில் ஐந்து காடையை வளர்க்கலாம். அதே போல் முதலீடும் அதிகமாக தேவைப்படாது. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்திருக்கின்ற சின்ன விவசாயிகளுக்கு மிகவும் கைகொடுக்கக்கூடியது. “காடை வளர்ப்பு” 
 
      
முத்துசாமி,அய்யம் பாளையம் கிராமம்,நாமக்கல் மாவட்டம்

அவர்கள் அனுபவம் பற்றி இங்கு காண்போம்.அவர் கூறியதாவது;-

ஏற்கெனவே, நாட்டுக் கோழி பண்ணை வைத்திருந்தேன். கோழியில் நோய், நொடி வந்து அடிக்கடி இறந்து போகும். அதனால் பராமரிப்புலையே பாதி நேரம் போயிவிடும். அப்பொழுது தான் நாமக்கல், கால்நடைக் கல்லூரியில் காடை வளர்ப்பைப் பற்றி பயிற்சி கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இடமே குஞ்சுகளை வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் இருந்த ஒரு கொட்டகையில் விட்டு வளர்த்தேன் குறைந்த நாட்களில் அதிக எடை வருகிறநாமக்கல் – 1’ ரக காடையைத்தான் நான் வளர்க்கிறேன். கோழி மாதிரி, இதனை நோய், நொடி தாக்குவதில்லை. அதனால் உசி, மருந்து போடுகிற வேலையும் இல்லை. தினமும் காலையில் ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீர் வைத்து பார்த்தால் போதும். அந்த வேலையை வீட்டில் இருக்கிறவர்களே செய்யலாம். கோழி வளர்த்தால் வருமானம் பார்க்க 90 நாட்களாகும். ஆனால் இந்தக் காடையில் 30 நாட்களில் வருமானம் பார்க்கலாம். இதைப் பார்த்த பிறகு கோழிப் பண்ணையை விட்டுவிட்டு நாலு கொட்டகையிலையும் காடையை வளர்க்க ஆரம்பித்துவிட்டேன்.
மாதம் 10 ஆயிரம்!
என்னிடம் மொத்தம் 2,000 குஞ்சுகள் இருக்கிறது. அதில் பொடிக் குஞ்சு, 10 நாள் குஞ்சு, 20 நாள் குஞ்சு, 30 நாள் குஞ்சு என்று நான்காக பிரித்து வளர்க்கிறேன். இதை சுழற்சி முறையில் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் வயதுள்ள குஞ்சுகள் நாமக்கல் கல்லூரியில் வாங்கி வந்து முப்பது நாளைக்கு வளர்த்து விக்கின்றேன். ஒரு காடைக்கான உற்பத்தி செலவு 15 ரூபாய் வரைக்கும் ஆகும். அதை 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரைக்கும் விற்கின்றேன். விற்பனையில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அருகில் இருப்பவர்கள், கறிக்கடைக்காரர்கள், நைட்ஹோட்டல்காரர்கள் தேடி வந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள். மாதம் ஆயிரம் குஞ்சுகளை வித்தாலும் செலவு போக 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
குறைந்த நாளில் அதிக எடை!

நாமக்கல் காடை – 1’ ரகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற காடை ரகங்களை விட இந்த ரக காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். மற்ற காடைகளைவிட, இந்த ரகத்தை வாங்கி வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும்.
பழைய பண்ணைகளே போதும்!

காடைகளை வளர்க்க அதிக பணம் தேவையில்லை. பயன்படுத்தாத கொட்டகை, கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கலாம். அல்லது குறைந்த முதலீட்டில் கொட்டகை போட்டும் வளர்க்கலாம். ஆழ்கூளம் (கொட்டகை), கூண்டு என இரண்டு முறையிலும் வளர்க்கலாம். நமது வசதியைப் பொறுத்து இதை முடிவு செய்து கொள்ளலாம். கொட்டகையைவிட கூண்டில் வளர்க்கும் போது கையாள்வதற்கு சுலபமாக இருப்பதுடன் நோய்க் கிருமிகளும் அதிகமாக தாக்காது. ஆனால், கூண்டு செய்ய ஆரம்ப முதலீடு சிறிது அதிகமாக இருக்கும். முதல் முறையாக காடையை வளர்ப்பவர்கள், சுமார் 12 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுடைய காடைக் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். முதல் பத்து நாட்களுக்கு விளக்குப் போட்டு, போதுமான சூட்டை (வெப்பம்) குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும். இந்தப் பத்து நாட்களும் பருவ நிலைக்கு ஏற்ப செயற்கை வெப்பம் கொடுக்க வேண்டும்.
இறப்பைத் தடுக்கும் கோலிக்குண்டு!
முதல் இரண்டு வாரத்தில் பெரும் பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் விழுந்து அதிகமாக இறந்து விடும். அந்தப் பாத்திரத்தில் கோலிக்குண்டுகளை போட்டு வைத்தால் உள்ளே என்னவோ இருக்கிறது என்ற பயத்தில் குஞ்சுகள் உள்ளே இறங்காமல் இருக்கும். இதன் மூலம் அவற்றின் இறப்பைத் தவிர்க்கலாம். அல்லதுநிப்பிள்மூலம் தண்ணீர் கொடுக்கலாம். நிப்பிளைப் பயன்படுத்தும் போது சுத்தமான நீர் தொடர்ச்சியாக குஞ்சுகளுக்கு கிடைக்கும். காடைக் குஞ்சுகளின் கால் மிகவும் மிருதுவாக இருக்கும். அதனால் வளவளப்பான பரப்பில் (செய்தித் தாள் போன்றவற்றின் மீது) வளர்க்கும் தீவனம், தண்ணீர் எடுக்காமல் இறந்து போகும். எனவே, சணல் துணியைப் பரப்பி அதன் மேல் மூன்று நாள் வளர்ந்த பிறகு, வளவளப்பான பரப்பில் வளர்த்தால் கால் ஊனமாகாது.இரண்டாவது வாரத்தில் காடையின் எடை, சராசரியாக 90 கிராம் இருக்க வேண்டும். இந்தப் பருவத்தில் தான் வளர்ச்சி வேகமாக இருக்கும் அதனால் தொடர்ச்சியாக தீவனம் கிடைப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் தீவனம் எடுக்க வசதியாக இடத்தை வெளிச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
500 கிராம் தீவனம்.. 200 கிராம் எடை!
காடைகளுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு ஆரம்பகால தீவனத்தையும் கொடுக்க வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது. ஆரம்ப கால தீவனத்தில் புரதம் அதிகமாகவும், எரிசக்தி குறைவாகவும் இருக்கும். இறுதி கால தீவுனத்தில் புரதம் குறைவாகவும், எரிசக்தி அதிகமாகவும் இருக்கும். காடைக்கான பிரத்யெகத் தீவனம் கிடைக்காவிட்டால் பிராய்லர் கோழிக்கான, ‘ஆரம்ப காலத் தீவனத்தையே பயன்படுத்தலாம். ஒரு காடை 500 கிராம் தீவனத்தை சாப்பிட்டால், 200 கிராம் எடை வரும். காடை வளர்ப்பில் தீவனச் செலவு 70% இருக்கும். சொந்தமாக தீவனம் தயாரிக்கும்போது இதைக் குறைக்கலாம். ஆனால் வாரத்திற்கு 1,000 காடைகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே தீவனத் தயாரிப்பில் இறங்க வேண்டும். சிறிய அளவில் வளர்க்கும்போது, தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கும் செலவு அதிகமாகிவிடும். காடைக்கு தீவனம் மாதிரியே தண்ணீரும் மிகவும் முக்கியம். இரண்டும் சுத்தமாக இருந்தால், பெரும்பாலும் நோய்கள் வராது. முதல் இரண்டு வாரங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் கொடுப்பது நல்லது. பிறகு, கொதிக்க வைக்கத் தேவையில்லை. தண்ணீரில்ஹைட்ரஜன் பெராக்ஸைடுகிருமிநாசினியைக் கலந்து கொடுத்தால் போதும். இது, குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து கொடுக்கலாம்.
கறிக்கோழி வளர்ப்பவர்கள் அதை விற்பனை செய்வதற்குள் 4 தடுப்பூசி போடுவார்கள். ஆனால், காடைகளுக்கு எந்த விதமான தடுப்பூசிகளும் போடத் தேவையில்லை. தண்ணீர், தீவனம் சுகாதாரமாக இல்லாவிட்டால், மட்டுமே நோய் தாக்கும். தரையில் ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது, கோழிகளைத் தாக்கும் ரத்தக் கழிசல் நோய் வர வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க தீவனத்தில் ரத்தக் கழிசல் நோய்த் தடுப்பு மருந்துகளைக் கலந்து கொடுக்கலாம். காடைகளைக் கூண்டு முறையில் வளர்க்கும் போது பெரும்பாலும் ரத்தக் கழிசல் நோய் வருவதில்லை.
விற்பனையில் வில்லங்கமில்லை
அதிகபட்சம் 15 ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு காடை 25 ரூபாய்க்கு குறையாமல் விற்பனையாகிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள், அசைவ உணவகங்கள், அருகில் உள்ளவர்கள், பார்களில் இதற்கான விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்களிடம் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பவர்களுக்கு இதுவரை விற்பனையில் பிரச்சனை என்று வந்ததில்லை. எனவே நிச்சய லாபம் கிடைக்கும் இந்தநாமக்கல் – 1’ ரக காடையை விவசாயிகளுக்கு முன்பதிவின் அடிப்படையில் ரூ. 3.50 வீதம் விற்பனை செய்கிறோம்.
தொடர்புக்கு:  
   இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், 
   கோழியின அறிவியல் துறை, 
    கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
      நாமக்கல் – 637002தொலைபேசி: 04286 – 266494
முத்துசாமி,அய்யம் பாளையம் கிராமம்,நாமக்கல் மாவட்டம்
தொலைபேசி: 99659 - 52483